Sunday, October 7, 2018

Sunshine

Sunshine Sunshine
Shining bright all day,
To mark the day and night diligently.
East to West 
The journey continues all day,
To mark the dawn and dusk dutifully.

Sunshine Sunshine
Shining bright all day,
To spread radiance all over,
Until the cloud clutches on a rainy day.

Sunshine Sunshine
Shining bright all day,
To nurture the growing crops,
Longing for your rays.

Sunshine Sunshine
Shining bright all day,
The infinite inventions on the universe,
Can never replace your dense power.

Sunshine Sunshine
Shining bright all day


Friday, September 7, 2018

சிறுதானியத்தின் சிறப்பு

தொன்று தொட்டு அனுதினமும் அமுதுபடைக்க
அடுக்களையில் உழன்ற அறுவகை சுறுதானியன்களான
கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, ராகி - ஆகியவை
மேலை நாட்டு உணவகங்களின் படையெடுப்பால்
இடைக்காலத்தில் சற்று பின்னடைந்திருந்தது - ஆனால்
இன்று மக்கள் சற்று சுதாரித்து
சிந்தித்து செயலாற்ற துவங்கியுள்ளனர்.

Image result for millets in tamilஇவ்விழிப்புணர்வின் விளைவு,
வீட்டிலிருந்து - விவாஹ மண்டபம் வரை,
சிற்றுண்டி உணவகத்திலிருந்து - நட்சத்திர விடுதி வரை,
சாமை பொங்கல், கம்பங் கூல்,
சிறுதானிய அடை, ராகி ரொட்டி,
கருப்பட்டி காபி, பனங்கல்கண்டு பாயசம்,
பல பதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.

எலும்புக்கு வலிமை தரும் கால்சியம்,
ரத்த சோஹையை சரிசெய்யும் இரும்புச்சத்து,
இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ்,
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து; நல்ல கொலஸ்ட்ரால் மேன்படுத்தும் சத்துக்கள்,
நன்மை பயக்கும் நார்ச்சத்து என அனைத்து சத்துகளின் சங்கமம்.

இத்தானியங்களில் சமைத்த பண்டம் எதுவானாலும்
ஐயம் இட்டு உண்ணுங்கள்;
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பதை அறிவோம், ஆராதிப்போம்!

Saturday, July 7, 2018

Blessings from Mom & Dad to Sharvesh on 12th Birthday!

Dear Sharvesh,

Twelve years before, 
You came as a twilight on a Friday evening,
To delight the whole family.

You are a precious gift from the Lord of All,
Hence named you by His Holiness.

Your first cry and first smile are evergreen to us,
Your first crawl and first step moved our hearts,
Your first words were divine discourse,
Your first dance on stage was sensational,
Your first brown belt for Karate was a sign of bravery,
Many more such firsts may come & go in your life,
But you being our first Son would remain forever!

Your Kinder Garden Graduation day was a Pride Moment,
Than our Engineering Graduation day.

Your loveable Mom, Dad & Yoogesh, will be your side,
In every step you march towards Success.
The road ahead is not made of rose buds;
You might find obstacles on the way;
But they are to strengthen you further,
So face them with valour.

The tear droplets from your eyes;
Would pierce through our Soul,
Let them not roll-down your Chubby cheeks.

May the Almighty guide you in the righteous path,
Help you to full-fill your duties as a Son,
Brother, Student, Best citizen and so forth.
May thy day be filled with Joy.
And we wish you whole-heartedly to attain eternal bliss,
Today, tomorrow and forever.

Continue to be a voracious reader to broaden your perspective,
To be more creative & to have a relaxed mind,
To gain a deeper appreciation of the world & 
To enrich your conversational repertoire.

Indulge into some form of sport,
Not just to exercise or develop a physical skill - But also
To build a positive self-esteem,
To make new friends and have fun,
To be a good team player and be focused on goals.

You & your little brother, Yoogesh, are very best Sons,
We love you always!

Mom & Dad



Sunday, June 24, 2018

கல்லூரி கனவலைகள்!


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
காலங்கள் உருண்டோடியிருந்தாலும்,

ஏற்ற தாழ்வுகள் பல கடந்திருந்தாலும்,
சாதனைகள் படைத்தது வான்புகழ் பெற்றிருந்தாலும்,
நாம் பெற்ற பிள்ளைகள் தோளைத் தாண்டி வளர்ந்திருந்தாலும்,
காதருகே கேசத்தில் சாம்பல் பூத்திருந்தாலும்,
எண்ணிய கணமே வதனத்தில் புன்முறுவலை வரவழைப்பது
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட,
கல்லூரியின் வசந்த கால நினைவலைகள் மட்டுமே!
அதில், நம் பண்ணாரி அம்மன் கல்லூரி நாட்கள்
தனியிடம் வகிக்க தன்னலமற்ற, தாத்பரியம் கடந்த
தோழமையுணர்வே காரணம்!

நாம் பயின்ற கல்லூரி படைத்த
பதினெட்டு வருட சந்ததியினரை
பசுமை நிறைந்த பூங்காவில்,
அவர்தம் குடுபத்துடன் காண
ஹ்ருதயமானது ஆர்பரித்திருந்தது.

ஜூன் 24 ஆம் தேதிக்காக
கனவுகள் பல சுமந்து காத்திருந்தோம்.

ஆதவனின் உதயம் காரிருளை அகற்ற
வரவிருக்கும் சகதோழர் மற்றும்
குடும்பத்தாருக்கு உணவளிக்க வாக்களித்தோர்,
அவர்தம் மனையாள், மாதாவின் துணைகொண்டு,
அறுசுவை உணவைச் சமைத்து, எடுத்துக்கொண்டு,
குடும்பத்துடன் பெங்களூரு கப்பன் பூங்கா செல்ல ஆயத்தமானார்கள்

பூங்காவின் பால பவன் முன் கூடி,
பரஸ்பர அறிமுகம் ஆனபின் பூங்காவிற்க்குள்  பிரவேசித்து,
குழந்தைகளோடு குழந்தைகளாய் சிறிய ரயில் பயணம்,
வானுயர்ந்த விசைப்படகு, சுழல்நாற்காலி நடன விளையாட்டு,
என விளையாடியும், பின் பனி கூல் ருசித்தும்,
முற்பகலை ஆனந்தமாககளித்தோம்!



மதிய
 உணவின் போது,
பல வீட்டின் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது,
அறுசுவையின் அர்த்தம், நாம் கொணர்ந்த
அறுவகை உணவான - எலுமிச்சைசாதம்தக்காளிசாதம்,
புளிசாதம்தயிர்சாதம்ஜிலேபி மற்றும்
குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த
உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலம் ஊர்ஜிதமானது!

தோழர் தோழியரோடு ஒரு கலந்துரையாடல்,
கடின உழைப்பு, சாமர்த்திய உழைப்பின் வரிசையில் 
வலையமைப்பு வருங்காலத்தை வசந்தகாலமாக்கும்
என்றெடுத்துறைத்தார் மூத்த சகோதரர் ஒருவர்.
முன்னாள் மாணவர்களின் மூலம் சகதோழர்களுக்கும்,
சமுதாயத்திற்கும், நம் கல்லூரியின் வருங்கால மாணவர்களுக்கும்,
உறுதுணையாக நிற்கும் யுக்தி பற்றி விவாதித்தோம்.

பிள்ளைச்செல்வங்களுக்கு நினைவுப் பரிசொன்று
தராமல் இந்நிகழ்வுதான் நிறைவுபெறுமோ ?
நமது இளம் தோழர்கள் பரிசுப்பொருட்களை வழங்க
அகமகிழ்ந்து பெற்றுக்கொண்டனர் குழந்தைகள்.

இச்சந்திப்பு, பெங்களூருவின் ஐந்தாவது அத்தியாயத்தின் முடிவு - ஆனால்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி,
முன்னாள் மாணவர்களின் மனக்கோட்டைக்கான அஸ்திவாரம்.
பயின்ற வித்யையின் துணை கொண்டு,
அக்கோட்டையை பலபடுத்த வாரீர்.

மிகவிரைவில் மீண்டும் சந்திப்போம்!



                                                                                                          புவனேஸ்வரி. சு.
                                                                                                               1996 - 2000



This was captured BIT Sathy Alumni New Letter published in July 2018.

Saturday, May 5, 2018

The Poem - பாலவிஹாரின் கோடைகால முகாம்!

கார்மேகக் கண்ணா!
உமது நாமத்தால் அன்பும் பண்பும் அறிந்து
அறவழியில் இன்புற,
எமக்கு கிட்டிய அரியதோர் உபாயம்,
பாலவிஹாரின் கோடைகால முகாம்.

அன்னையர் அரவணைப்பில் இருந்து,
ஆறிரவு அகல அழுத இதயம்;
பசுந்தளிர் சோலையானா சின்மய சாந்தீபனி ஆஸ்ரமத்தின்
அன்பில் ஆசுவாசம் அடைந்தது.

அனுதினமும் சுவாமி அபராஜிதானந்தா அவர்களின் வழிநடத்தலில்,
நமச்சிவாயனின் திருவடியில் 'நாராயண சூக்தம்' பயின்றோம்.

வானுயர்ந்த சின்மய கணபதியின் பாதம் தொட்டு
மித்திரர்களின் தோளோடு தோள் சேர்த்து
கிருஷ்ணரின் வேடம் தரித்து
வெண்ணை கொண்ட மட்பானையை உடைத்தால்,
தண்ணீர் தான் வழிந்தோடியது; வெண்ணையல்லவே!
இது விதியின் விளையாட்டா ? - அல்லது
யுவ கேந்த்ரா சகோதரர்களின்  சதித்திட்டமா ?
விடையளியுங்கள் ஆச்சாரியர் அவர்களே.

விண்மீன்களை விட்டில்பூச்சிகளாய் எண்ணிய எமக்கு
ஸ்ரீ பிரஷாந்த் அவர்களின் வானோக்கு மூலம்
சப்தரிஷி மண்டலம், பெகாசஸ் மற்றும் 12 ராசிகளின்,
நட்சத்திர கூட்டங்களைத் துல்லியமாய்க் கண்டோம்.

மா, பலா, சப்போர்ட்டா மற்றும் நெல்லி மரங்களின்
காய் கனிகளை அதன் பிறப்பிடத்தில் கண்டது - எமக்கு
கண்கொள்ளா காட்சியாயிற்று.

ஆலமரத்து நிழலின் ஆனந்தம்;
மாமரத்தில் ஏறுவதின் ஆரவாரம்;
பசுமாட்டின் பராமரிப்பு;
பத்து நாள் கன்றின் ஸ்பரிசம்;
குரங்கின் மடியில் குட்டியின் கதகதப்பு;
ஓட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் நத்தை;
எட்டிகுத்திக்கும் வெட்டுக்கிளி;
வாலை ஆட்டும் நாய்க்குட்டி;
இவையனைத்தும் காப்பியத்திலும்,
கிராமிய படங்களிலும் கண்ட
இயற்கை காட்சிகள்
இன்று கண்ணெதிரே நினைவாயிற்று!

சட்டென்று கார்மேகம் சூழ்ந்து
மண்ணில் விழுந்த முதல் துளியால்
எழுந்த மண்வாசனையானது
மயிலிறகு போல் மனதை வருடியது.

வியக்க வைக்கும் விஞ்ஞானம்,
விண்ணைத்தொட வித்திட்டத்து,
நமது முன்னோர் படைத்த வேதாந்தங்களும், உபநிஷங்களும் மற்றும் சாஸ்த்திரங்களும்    என்றுணர்த்தோம்.

எம்மவரை, கோவிந்தா, கோபாலா, அச்சுதா,
முகுந்தா, கேசவா, மாதவா, முராரி என்று
கிருஷ்ணரின் நாமம் கொண்டு,
ஏழு அணிகளாக பிரித்து,
இனிவரும் முகாம் நாட்களில்
ஒன்றிணைந்து செயலாற்ற பணித்தனர்.
ஆன்மீகம் சார்ந்த புதையல் வேட்டை, விளையாட்டு,
குழுமுறையில் கலந்துரையாடல், நாடகம் என்று
ஒவ்வொரு நிகழ்விலும் ஒருமித்து பங்கேற்றோம் .
'நான்' எனும் வேற்றுமையை அழித்து,
'நாம்' எனும் ஒற்றுமையை தோற்றுவித்த,
முகாம் குழுவிற்கு மனமார்ந்த நன்றி!

முகாமின் ஆதி  முதல் அந்தம் வரை,
மனதை மதியால் வெல்லும் சூத்திரத்தை போதித்து;
உடல், உள்ளம், அறிவாற்றல் ஒருங்கிணைந்து செயலாற்றினால், 
கோபம், பேராசை, திரிபுணர்ச்சி, அகந்தை, பொறாமை போன்ற
எதிர்மறை எண்ணங்களை ஒளித்து;
வாழ்க்கையை செழிமையாக்கலாம் என்று எடுத்துரைத்தனர்.

இன்று எம்முள் விதைக்கப்பட்ட நல் விதையானது,
விரைவில் பெரும்விருட்ஷமாக விஸ்வரூபம் தரித்து,
பூவுலகைக் காக்கும் என்று வாக்களிக்கின்றோம்.

கற்ற ஸ்திரோத்திரங்களும், பஜனைகளும்,  வேதங்களும் மனதில் ரீங்காரமிட
பேருந்தில் ஏறி பயணிக்க எத்தனித்த எம்மவரை
வாசல் வரை வந்து வழியனுப்பி
பண்பாட்டை பறைசாற்றிய ஆச்சாரியர் அவர்களுக்கு வந்தனம்!

யாம் அனைவரும்
உத்தம புத்திரர்களாக திகழ
நித்தமும் பயிற்ச்சி அளித்த
"பாலவிஹாரின் கோடைகால முகாம்"   நாட்களை
சிந்தையில் வைத்து சிறப்புறுவோம்!

- Tamil Poem By
Bhuvana